
விடியும் என
நம்புகிறவனுக்கு
மட்டுமே -
உறக்கமும்
விழிப்பும்
சுகமாய் இருக்கும்!
உன் மீது
நீயே
நம்பிக்கை
வைக்கும் போது -
உலகம்
உன் பார்வைக்கு
இடை திரையின்றி
தெளிவாய்
தெரியும்!
சுற்றியுள்ள
உன்
உறவுகளையும்
நண்பர்களையும்
முழுசாய் நீ நம்பு!
நம்பிக்கைதான்
வாழ்க்கை
என்பதற்காக மட்டுமல்ல!
சில விசயங்களை
நீ
நம்பி ஏமாறும்போது -
உனக்குள்
ஞானம் பிறக்கும்!
ஒளி பரவும்!
மனசு தெளிவாகும்!
சிந்தனை செழிப்பாகும்!
துரோகத்தை
சுவைத்த மனிதனே -
தன் துன்பங்களை
தூக்கிலிடும்
தந்திரம் கற்கிறான்!
நம்பிக்கையும்
அதன் இழப்பும்
உன்னை
முழு மனிதனாக்கும்!
நம்பிக்கை வை!
Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts
நம்பிக்கை வை!
Subscribe to:
Posts (Atom)