புலம்பல்!



பொய்யான உறவுகள்..
போலியான சொந்தங்கள்..

உதட்டில் சிரிப்பை வைத்து
பொய்யை மட்டுமே பேசும்,
மனசே இல்லாத
மனுஷ ஜென்மங்கள்!

பாழாய்ப்போன உலகம் என
புலம்பி சாகும் மனிதனே..

உண்மையை மட்டுமே
உரக்க பேசி;
உன்
உயிர் உள்ளவரை
உன்னோடு வாழும்
என்னை ஏன்
நீ மதிப்பதில்லை?

- ஒரு மனசாட்சியின் புலம்பல்



No comments:

Post a Comment