என்
மனசு முழுக்க
மல்லிகை வாசம்
வீசவைத்தவள்!
என்
சிகப்பு சிந்தனைகளுக்கு
வெள்ளை சாயம்
பூசிவிட்டவள்!
என்
கனவு தோட்டத்தில்
வாடாத பூக்களை
பூக்கவைத்தவள்!
என் கண்ணீரின்
சுவை தெரிந்தவள்!
என் காதலின்
நிலை அறிந்தவள்!
தடுமாறும் தருணத்தில்
தாங்கிப்பிடிப்பவள்!
தடம் மாறும் தருணத்தில்
தட்டிக்கேட்பவள்!
என் நலம் காத்திட
தன்னலம் மறந்தவள்!
நிம்மதி நான் காண
நித்தமும் உழைப்பவள்!
கனமான கவலைகள்
மூழ்கடிக்கும் வேலையில்,
என்னை
தக்கையாய் மாற்றிடும்
தந்திரம் தெரிந்தவள்!
அவள்,
என் விழியின் ஒளி!
என் வலியின் மொழி!
என்னை
நிழலாய் தொடரும்
நிஜம்!!
அவள்!
Subscribe to:
Post Comments (Atom)
annaivarukum anbanavargal amaivathilai..
ReplyDeletenee seitha murtpayan - intha piraviyil
nee vilum pothelam unnudan irunthu
thooki vida oru inimaiyana thozhi..
poramaiyaga ullathu..