என்னவளே..
எனக்காக
நீ தந்தது
எத்தனை எத்தனையோ..
காதல் செய்ய
இதயம் தந்தாய்..
காமம் கழிக்க
தேகம் தந்தாய்..
சொல்லி அழும்படி
வலிகளை தந்தாய்..
சொல்ல முடியாதபடி
சுகங்களை தந்தாய்..
அலைபாயும் மனசுக்கு
ஆறுதல் தந்தாய்..
நாளைய கனவுக்கு
நம்பிக்கை தந்தாய்..
சுகம்
சோகம் என
கண்ணீர் வரவை
சரி விகிதத்தில்
கலந்து தந்தாய்..
என்னை
தொடர்வதாய்
(பொய்) சொல்லி
உன்னை
தொடரவைத்தாய்..
என் சுதந்திர
புத்தகத்தின் அட்டைபடமாகிட-
அடம்பிடித்து
அரங்கேறினாய்..
எனக்காக
நீ தந்தது
எத்தனை எத்தனையோ..
உனக்காக
நான் தந்தது..
என்னை மட்டுமே !!
நீ தந்தது!
Subscribe to:
Post Comments (Atom)
superb...:)
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_9.html
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும் வாழ்த்துக்கள்...
ReplyDelete